வியாழன், 21 பிப்ரவரி, 2013

வார்த்தைகளின் தையல்காரி

வார்த்தைகளின் தையல்காரி
இறந்திருந்த பூச்சிநீக்கி
வெட்டி ஒட்டித்தைத்து
மடிப்பு மடிப்பாய் அடுக்கி
அம்மன் பட்டாயோ,
அங்கியாயோ,
உச்சிபோர்த்தும் துண்டாயோ
உருவிப் போட்டாள்..
கவிதை என்னும் பேரில்..
பழமை வீச்சத்தில் ஊறிக்
கவிச்சியடித்துக் கிடந்தன
பூச்சிகளின் எச்சத்தோடு.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))