செவ்வாய், 30 அக்டோபர், 2012

என்று தீரும் இதெல்லாம்..?

ஆணிகளால்
அறையப்படப்போகும்
கட்டைகளைச் சுமந்தபடி
பயணப்படத் துவங்குகிறான்.
சவுக்கடிகள் சீறுகின்றன
கட்டைகளோடு கட்டையாய்
விழுந்து எழும் அவன்மேல்.
யார்யாருடையதெல்லாமோ
சுமக்கிறான்.
சுமந்து சுமந்து அதிலேயே
மரிக்கிறான்.
சோர்ந்த கண்களும்,
கையறு நிலையும்
உறைந்து கிடக்கும்
இரத்தத்திப்பிகளும்
உயரப்பறக்க முயலும்
பறவையைப் போன்ற
சித்திரத்தோடு
நிறைவேறாமலே
நூற்றாண்டுகளாய்த்
தொடர்கிறது அவனது
ஏக்கமும் பயணமும். 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))