வியாழன், 8 டிசம்பர், 2011

உதறப்பட்ட வார்த்தைகள்.

மௌனக்கூடுடைத்து
வார்த்தை சிறகுகளில்
வலம் வரும் பட்டாம்பூச்சிகள்
வீழ்ந்து கிடக்கும்
வெள்ளைத்தாள்களில்
தொத்தி தொத்தி
கிறுக்கலாகின்றன.
நிம்மதியின்மையை
சுமந்த தாள்
தாளமுடியாமல்
காற்றில் தலைதிருப்பி
உழன்று கொண்டிருக்கிறது,
உதறப்பட்ட வார்த்தைகளோடு.

5 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))