திங்கள், 26 செப்டம்பர், 2011

முத்தமிழ் மன்றத்தில் தமிழிசைப் பாடல்கள் -- சேஷகோபாலன்.

தமிழிசைப் பாடல்களை முத்தமிழ் மன்ற விழாவில் சேஷகோபாலன் அவர்கள் பாடியது.. இன்று வாசிக்கும்போது இவ்வளவு அழகான தமிழ்ப் பாடல்கள் இருக்கா என ஆச்சர்யப்படவைத்தது.

1. உலகம் யாவையும் தாமுள வாக்கலும்.

2. பாலும் தெளிதெனும் பாகும் பருப்புமிவை நான்கும்.

3. அள்ளி உண்டிடலாம் வாரீர் எல்லோரும் தெள்ளமுதாகிய செந்தமிழ்த் தேனை., உவகை பெருக்கி ஆனந்தக் கண்ணீர் சொரிய.

4. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.

5. அலைபாயுதே கண்ணா.. மனம் மிக அலைபாயுதே. உன் ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே..

6. ஆறபிமானம் வைத்தாதரிப்பாய் என்னை ஆனந்த பைரவி.

7. அகிலாண்டேஸ்வரி..

8. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..

9. சுட்டும் விழிச் சுடர்தான் சூரிய சந்திரரோ..

10. ஹரிகேச முத்தையா பாகவதர் பாடிய “ கந்தா உன் தாள் எனக்கருள்”. இது நிரோஷ்டம் எனப்படும். நீரோட்டம் எனப் பொருள். முஷ்ட என்றால் பாடும்போது உதடுகள் சேருவது. நீர் என்றால் உதடுகள் சேராதது.
‘சரிகதனி’-- என்ற இராகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தில்லானா- சாகித்யம் இவர் இயற்றியது. ‘த்ருகிட’, ‘சரிகதனிஸ’ ..

பாடிப்பாருங்கள் ..”கந்தா உன் தாள் எனக்கருள்.. ” பாடும்போது உதடுகள் சேருவதில்லை.

11. காக்கைக் சிறகினிலே..

12. தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்துமாரி..

13. நல்லதோர் வீணை செய்தே..

14. கண்டேன்..கண்டேன் சீதையை ராகவா..!

15. இசைபடிச்சதாலே பழனிமலை நின்ற குருவே.. இகம்பர சௌபாக்கியம் அருள்வாயே..!

16. வாழிய செந்தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. வந்தே மாதரம்..

இதில் 4,5 பாடல்கள் மகா கவியினுடையது. மிக அற்புதமாக பாடினார் சேஷகோபாலன் அவர்கள். நினைத்துப் பார்க்கும்போது இன்று கூட தமிழ்த் தேனருவி பாய்ந்ததுபோல இருக்கிறது அந்தத் தமிழ் இசையமுதம்..

வாழிய செந்தமிழ்.. வாழ்க தமிழிசைப் பாடகர்கள்.

3 கருத்துகள்:

  1. நூற்றுக் கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))