செவ்வாய், 2 டிசம்பர், 2025

ரயிலோடும் முன்றில்

பயண ஆரம்பத்தில்
வழியனுப்ப வந்தபோது பார்த்தது.
மேகம் மூடியழவும்
திசைமாறியதில்
எங்கோ காணாமல் போனது.
இருள்பூவாய்ப் பூத்த கண்கள்
தேடிச் சோர்ந்து குவிந்தன.
புலரும் வரை
தேடித் தேடி ஓடித்தேய்ந்த அது
ஏதோ ஒரு திசையில் திரும்பி
எட்டிப் பிடித்தே விட்டது
வெள்ளிப் புன்னகை முகத்தோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))