பழைய பைகளைப் போல்
சுருங்கிக் கொண்டிருக்கிறது தோல்.
விரிந்திருக்கும் விழிகளில்
கூம்பு இருளாய்ப் படிகிறது வானம்.
விரல்களின் தொடுகையில்
முதிர்ந்த செல்கள்
வெண்துகளாய்ச் சிதறுகின்றன.
கடவுள் துகளோடு
கலக்கத் துடிக்கிறது ஆவி.
பின்னுமொரு பிறவியெடுத்தால்
பக்கத்துத் தோட்டத்துப் பெரு மரத்தின்
இளந்துளிராய் விரிய ஆசை
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!