வெள்ளி, 8 அக்டோபர், 2021

கற்கண்டு

துளித்துளியாய்
மொட்டுவிடத் தொடங்குகிறது மழை
மரங்களிலிலிருந்து வெண்பூக்கள்
உதிர்கின்றன.
வாடைக்காற்று உவகையுடன்
தழுவிச் சுழல்கிறது.
பால்கனியில் பாலாவி படர்ந்து
சிலிர்க்க வைக்கிறது என்னை.
இதழில் வீழ்கிறது ஒருபெருந்துளி
கற்கண்டாய்.
இதென்ன பேரவஸ்தையென
சுண்டிவிட எத்தனிக்கிறேன்.
இரு இரு.. பொறு..பொறு..
அது நான்தான் என்கிறாய்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))