ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பழக்கதோஷம்

மரங்கள் காத்திருக்கின்றன
பறவைகள்தான்
ஓய்வெடுக்க நேரமில்லாமல்
உணவுத் தேட்டையில்.
கூடுகளில் முட்டைகள்
தாமே பொறிந்து வருகின்றன
சிறு சிறகு கோதி
விழுந்தெழுந்து தாமே பறக்கக் கற்கின்றன
குஞ்சுகள் பறந்தபின்னும்
தாய்ப்பறவைகள்
பழக்கதோஷத் தேட்டையில்
பறந்துகொண்டே இருக்கின்றன. 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))