வியாழன், 21 ஜனவரி, 2021

உழுதவன் கணக்குப் பார்த்தால்..

பாளமாய் வெடித்து
வாழ்வில்லாத வயல்கள்
அறுவடைக்குமுன்னே
முளைக்கும் நெற்கதிர்கள்
ட்ராக்டர் உழவில்
இழுபடும் பூமி
விளைச்சலின் பலனோ
தரகர்கள் கையில்
உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கென்ன
உழுதவனே மிஞ்சுவதில்லை.. 


  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))