செவ்வாய், 29 டிசம்பர், 2020

எறும்பிலிருந்து அரவமாய்..

எங்கெங்கோ இருக்கும் 
தீனியைத் தேடியபடி
அலைகிறது எறும்பு மனம். 

வரிசைகட்டி
வளைந்தோடி
புற்றாய்ச் சேர்க்கிறது.

கரையான்கள்
கவிழ்ந்துண்ண
செம்மேனியாய்ச் சமைகிறது புற்று

துளைகளுக்குள் நாகம்புக
பாலூற்றி வணங்கத் தொடங்குகிறது
கால சர்ப்ப தோஷம்

எறும்பிலிருந்து திடீர் அரவமாய்
உயர்ந்தமண்
கடவுட் காட்சியாகிறது. 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))