ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

செம்மாந்தல்.

மஞ்சள் இஞ்சி மிளகு
மாமருந்தாகிவிட்டது
சுக்குமி ளகுதி ப்பிலி என்று
கேலி செய்தவர்கள்
கசாயத்தின் பிடியில் காய்ச்சலைக் 
கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரும்
நிலவேம்பும் சுவையற்ற நாக்கில்
கசப்புப் பாயாசங்களாக
வழிந்தோடுகின்றன. 
கோள்களும் கிரகங்களும்
நாட்டை சுத்தமாக்கிவிட்ட மகிழ்ச்சியில்
செம்மாந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))