சனி, 15 பிப்ரவரி, 2020

விதியின் வாதை எழுத்துக்கள்.

இறகைப்போல
இலையைப்போல
உதிர விரும்பும் கனவுகள்.
ஒளியைப் போல
வளியைப் போலக்
கரைந்து விடும் ஆசைகள்.
நெருப்பில் எரிந்து
நீரில் கரைந்து
மண்ணுள் புகும் ஏக்கங்கள்.
நெற்றியின் மேலோ
உச்சந் தலையிலோ
விதியின் வாதை எழுத்துக்கள்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))