ஞாயிறு, 12 ஜனவரி, 2020

துளைத்தல்

ஒரு வெம்பல்
ஒரு அழுகல்
தானாய் விடும்வரை
வீசியதில்லை மரம்

கொஞ்சம் தேய்வு
கொஞ்சம் சாய்வு
உருளும் நிலவை
வீழ்த்தியதில்லை வானம்

ஏதோ கோபம்
ஏதோ புறக்கணிப்பு
பொறுக்காமலும் சகிக்காமலும்
வெட்டிவிடுகிறது தன்மானம்

பாவப்பட்ட பூனையினதும்
நீர் வடியும் நாயினதுமான
கண்களைத் துடைத்தணைத்தாலும்
துளைத்துக்கிடக்கிறது மனம்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))