செவ்வாய், 10 டிசம்பர், 2019

காவி

பிள்ளைப்பிராயத்திலிருந்து
காவி என்னை லாவிக்கொண்டுதான் இருக்கிறது.
துறவறத்தை நோக்கிச் செல்லல் மற்றும்
தன்வயம் இழந்து தெய்வமயமாதல்
வெண்மையும் நீலமும் கருப்பும் கூட
அதற்குத்தானென்றறிகையில்
சிவந்து குழம்பித் திரிகிறது என் காவி ரத்தம்.

1 கருத்து:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))