திங்கள், 26 ஆகஸ்ட், 2019

முதுசங்கள்.

பெருவிருட்சங்கள் நிரம்பிய தெருக்கள்
கைபிடித்து நடக்கவைக்கின்றன
கிளைகளின் ஊடாய்.
தொலையாத அழகு
தோன்றித் தோன்றி தொடர்கிறது
நடவில்லை எம்மரத்தையும்
நட்டவர்களையும் கண்டதிலை
எப்படிக் கிளைத்தன எப்படி விளைந்தன
வீடேறும்போதுதான் உறைக்கிறது
முதுசங்கள் விழுதுகளால் விதைகளால்
சுயம்பாய் உயிர்த்திருப்பது.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))