பெருவிருட்சங்கள் நிரம்பிய தெருக்கள்
கைபிடித்து நடக்கவைக்கின்றன
கிளைகளின் ஊடாய்.
தொலையாத அழகு
தோன்றித் தோன்றி தொடர்கிறது
நடவில்லை எம்மரத்தையும்
நட்டவர்களையும் கண்டதிலை
எப்படிக் கிளைத்தன எப்படி விளைந்தன
வீடேறும்போதுதான் உறைக்கிறது
முதுசங்கள் விழுதுகளால் விதைகளால்
சுயம்பாய் உயிர்த்திருப்பது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!