செவ்வாய், 1 ஜனவரி, 2019

வாள்களும் பூக்களும்.

பனிபெய்திருக்கும்
பன்னீர்ப் பூக்கள் கொட்டி
வாசனை தெளிக்கும் சாலை உனது.
ரத்தச்சிவப்பில்
காட்டமான குல்மோஹர்கள்
வெகுபிரியம் எனக்கு.
சந்திக்காத சாலைகளின்
வெவ்வேறு முனைகளில்
வந்து சேர்ந்த நம்மை
வெகுவேக வாகனங்கள்
ஒன்றாய் நிறுத்திவைக்கின்றன.
பசுவின் மென்மையாய்ப்
பன்னீர் சிந்தும்
உன் பார்வைப்பூக்களை
என் செவ்வாள் கொண்டு வெட்டுகிறேன்.
ஆயுதபாணியை அடிக்கலாம்
நிராயுதபாணியையுமாவென
உடைந்து விழுகின்றன எனது வாள்கள்.
புதிதாய்ச் சேகரமாகின்றன
அம்மாபெரும் சாலையில்
வாள்களும் பூக்களும்.

5 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))