வெள்ளி, 5 அக்டோபர், 2018

கழிமுகம்.

ஊசியாய் இறங்குகிறது மழை
ஆணியடிக்கிறது பூமியை.
சிரச்சேதம் செய்கிறது செடிகளை
பசிய கவிச்சி பரவுகிறதெங்கும்.
விழுந்து கிடக்கும்
மரக்கட்டைகளை இழுத்துக்கொண்டு
முள்முடி சுமந்து
கழிமுகம் பயணிக்கிறது நீர்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))