வெள்ளி, 2 டிசம்பர், 2016

முள்.

ஒரு முள்ளை
எடுப்பதற்கான ப்ரயத்தனம்
கொலையைவிடக் கொடுமையானது

ஒரு ஊக்கோ முள்வாங்கியோ
ரத்தம் பாராமல் திரும்புவதில்லை
ஒடிந்த முள்ளுடன்.

எப்போதும் எடுத்தோமோ இல்லையோ
என்பதறியாமல் ரத்தம் சிந்தும்
முட்களுடன் வாழ்கிறோம்

தொட்டிச் செடிகள் மட்டுமல்ல
மாடிப்படிகளின் வழவழத்த மரக்கைப்பிடிகளும்
முட்களான சிலாகைகளுடன் காத்திருக்கும்

எதவறியாமல் எல்லாவற்றையும்
நம்பும் கரங்களுக்கு அவை
முட்களைப் பரிசளிக்கத் தவறுவதேயில்லை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))