வியாழன், 3 நவம்பர், 2016

ஒத்ததிர்வின் ஓசை

துளித்துளியாய்க்
கரைந்துகொண்டிருக்கிறது
நேற்றைய சம்பவம் இனிப்பாய் .
சர்க்கரைப் பந்தலில்
தேன் மாரி பெய்து
கடைவாய்ப்பல்லில் ஒளிந்து
இதயத்தில் வடிகிறது.
ஒளிக்கும் முகம் களிக்கும்
உள்ளும் புறமும் நெகிழும்
ஒத்ததிர்வின் ஓசை
ஒன்றோடொன்று இயைந்து.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))