புதன், 23 நவம்பர், 2016

களப்பலிகள்

களப்பலிகள் கேட்பதில்லை
காதல் யுத்தம்.
சதுரங்கச் சிப்பாயல்ல
சாய்த்துவிட.
எத்திக்கும் சித்திக்கும்
சாதுர்ய ராணிக்குத்
திசைகள் புரிவதில்லை
பேதமையாகிறாள்.
முற்றுமுணர்ந்த ராஜாவின்
கம்பீரப் பார்வை
ராணியின்பக்கம்
மௌனமாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))