திங்கள், 31 அக்டோபர், 2016

பேய்ச்சாமி

தினம் செல்லும்
ரயிலின் கூவல் ஓலத்தில்
கவிழ்ந்து கிடக்கிறது
ஒரு செம்பருத்தி.,
ரத்தச் சூல் பெருக.

திருவனந்தலில் கொய்து
கருக்கருவாளில் முடிந்து
பேய்ச்சாமி கொத்தியிருக்க
கையறு நிலையில்
உன்மத்தமாய்ப் பெருகிறது
உப்புவெள்ளம்.

1 கருத்து:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))