பேச்சு போதை
நடுயாமம் நீள் இரவு
நெடும்பகல் குளிர்மாலை
இருவராடும் ஊஞ்சலாட்டம்
முன்பின் நகரும்
காற்றாய் கனலாய்
கனிந்து பெருகும்.
எதற்கும் அசையா
நெஞ்சம் நெகிழும்
உருகவைக்கும்
உளறவைக்கும்
பிடித்ததெல்லாம்
பித்தம் பித்தும்
கசப்பும் ருசிக்க
எதையுமருந்தாதிருந்தும்
வார்த்தைகள் சுழலும்
பேச்சுமோர் போதை.
அற்புதம்
பதிலளிநீக்குநன்றி செல்வா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!