ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கிடை.

வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.

துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும்.

ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.

மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))