புதன், 25 மே, 2016

தானாய் எல்லாம் நடக்குமென்பது பழைய பொய்யடா :-



தானாய் எல்லாம் நடக்குமென்பது பழைய பொய்யடா :-

கேரளத்துப் பெண்களே !
நீங்கள் மரவள்ளிக்கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் உள்ளமும் பொசுங்கிப் போகின்றது.

இப்படித்தானே இலங்கையிலும்
இந்தியாவின் இளங்குருத்துக்கள்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றனவென்று
இதயம் சீழ்பிடித்துப்
பேப்பர் ஓடைகளில்
பேனாப் பூக்களின்
நெருப்புப் புன்னகைகள்.

இவை
மெழுகுவர்த்தியில் மலரும்
வெள்ளைப் பூக்கள் இடும் முறையீடுகள்.

இங்கே கல்லூரிக்குக் கட் அடிக்கும்
மாணவர்களைப் பார்க்கையில்
கல்வித்தாயின் காலடிச் சுவட்டை
ஏக்கத்துடன் பார்க்கும் ஈழத்தமிழ்ச்சிறுவன்
நினைவுக்குள் வருகின்றான்.

மயக்கம் நீங்கி ஓன்று கூடுங்கள்
மாணவச் செல்வங்களே
நம் ரத்தத்தின் ரத்தமான
ஈழத்துச் சொந்தங்களைப் பாதுகாக்க.

ஈழத்துச் சாத்தான்களை
வேரறுக்க.. ! கூறாக்க !!.

-- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))