செவ்வாய், 3 மே, 2016

நினைவுப் பறவை



என் இதயத்தின் இமைகள்
இரத்தக் கண்ணீர் வடித்து
அழுதுகொண்டே விம்முகின்றன.
நீ வருவாய் என நம்பி
எந்நேரமும் கண்விழித்துக்
காத்திருப்பதால்
தூங்கவே முடிவதில்லையாம்.
என் இதயத்தின்
வாயிற்கதவுகளுக்கு
நான் ஒரு
பூட்டைத் தயார்ப்பண்ணி
வைத்துள்ளேன்.
நீ உள்ளே சென்றவுடன்
இழுத்துப் பூட்டுவதற்குத்தான். !
நினைவுப் பறவை பறக்கிறது !
எண்ணக் கூட்டுக்குள் தேடினேன் !
புரிகிறதா உனக்கு.. !

-- 80 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))