செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விநாயகர் துதி :-



விநாயகர் துதி :-

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவாய் !
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !

ஆனை முகத்தோனே ! ஆ(யா)ர்க்கும் நலம் புரிந்திடுவாய் !
அன்னை பார்வதி போல் அழகுப் பெண் தேடுகின்றாய் !

உன்னையே கதியென் றுய்யுமுன்(உன்) அடியார்க்குத்
தந்தேன் அபயமெனத் தன் கரம்  நீட்டிடுவாய் !

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமைபல புரிவோர்க்கும்
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவாய் !

-- 80 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))