புதன், 3 பிப்ரவரி, 2016

மழை அல்லது ஸ்வயங்கள் :-



மழை அல்லது ஸ்வயங்கள் :-

முக்கணமும்
முப்பொழுதும்
நீயேயாகி
யாருடன் இந்த விதண்டாவாதம்
உனக்குள்ளே முரண்பாடா ?
முணுமுணுக்காமல்
உரத்துச் சண்டையிடு
ஜன்னலோரத்துச் சொட்டே
நீ கூட்டத்தோடு கோவிந்தாவல்ல
தனுமை.. தன்மை.. தனிமை
குதிரையின் பாய்ச்சலாய்
வேகம் அதிகரிக்கச் சண்டையிடு.
உன் லகான் நீயே.
கொடுத்தலும் கெடுத்தலும்
உன் லயம்.
குழந்தையின் விருப்பப்பட்ட
ஸ்பரிசமாய்
பயிர்களின்
பச்சையம் வெளிப்படுதலாய்
தூரத்தில் நடக்கும்
மலையின் பூகம்பமாய்
மயானம் செல்லும்
சவ ஊர்வலமாய்
நீயும்.

--- 85 ஆம் வுடைரி

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))