புதன், 20 ஜனவரி, 2016

வாழ்க்கை:-



வாழ்க்கை:-

ரோட்டோரம் பூராவும்
தென்னை மரங்கள்
பூக்களில்லை
மரங்களில்லை
செடிகளில்லை
கொடிகளில்லை
நிழலுக்குதவாமல்
தனிமைப் படுத்திக்கொண்ட
பங்களாக்கள் போல்
உயரத்தில் தலை வைத்து
முகம் வான் மல்லாத்தி
சாலையின் செருக்குகளாய்
அணை கரையென்ற
தளைகளைத் தகர்த்து/
தளைகளுக்குள் தங்கி
சாலைக் கரையின்
உணர்ச்சியற்ற
உருவக் குச்சிகளாய்த்
தென்னைகள்.
வெய்யில் வளைத்த
அடைப்புக்குறிகளாய்
சஹாராவின்
நாடோடி யாத்ரிகர்களாய்/
திமில் நீர் சேர்த்த
நிமிர்ந்த ஒட்டகங்களாய்
வளைந்து குனிந்து
அலைந்து அலைந்து
தென்னைகள் தென்னைகள்.

-- 85 ஆம் வுடைரி

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))