ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

குளிர் உணவுக் கவிதை.

தீராத சொற்கள் சுமந்து
உலா வருகிறது என் கவிதை
எதை எடுப்பது எதை விடுப்பது
குழப்பத்தில் பறந்தலைகின்றன
மகரந்தக் கால்களோடு தேனீக்கள்.
ராணித் தேனீவசமிருக்கும்
தேனடைக் கோட்டையிலிருந்து
எப்போதோ சாரலாய்ச் சிதறிய 
தேன் துளிகளை
எறும்பின் வாய்கொண்டு
குளிர் உணவுக் கவிதையென
மனப்புற்றில் சேர்க்கிறேன் .
நுணர்கொம்புகள்
வெவ்வேறு வசமிழுக்க
கால் அப்பும் தேன்திப்பி
நிரப்புகிறது புற்றையும் என்னையும்.
 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))