திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பனித்துளிகள்:-



பனித்துளிகள்:-

வெய்யிலின் இதமான பொசுங்கல்களிலும்
இலைக்குள் பூக்களுக்குள்
இறுகிப்போய் இறுக்கிக்கொள்ளும்
பனித்துளிகள்.
ஓட்டுக்குள் பதுங்கி
மெல்லத் தலைநீட்டும்
சில மனங்கள்.

பூக்களுக்குப் பாவாடை
கட்டிவிடும் சாகஸமாய்
மனித முகங்களைப் போர்த்தும்
போலிப் போர்வைகள்.

திடீரென அறிமுகமாகி
மனதை உடலைச்
சிலீரெனெக் குளிர்வித்து
மறையும் சிநேகங்கள்.

நான் உறுதியில்லை
என்னை நம்பாதே நான்
சிலநொடிப் பரவஸங்களுக்காக
மட்டுமே எனத்
தொடத் தொட விலகி
மறுத்து
அடுத்த பூக்களை மட்டும்.
ஆதர்ஷிக்கும் அன்பான பனித்துளிகள்.

-- 83 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))