திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நெற்றிக்கண்.

நெற்றிக்கண் நெருப்பு
சுமக்க இயலா உமை தவிக்க
பொறி தோய்ந்து விழுந்தது
பொற்றாமரைக் குளமா
சரவணப் பொய்கையா
ஜடைநாகப் பில்லைகள் குலுங்க
ஒரு பாகமானவளின்
கௌரிதாண்டவம்..
ரிஷி கேசமானவனின்
நாகாபஸர்ப்பிதம்
கூந்தல் பாடிய தருமி
நக்கீரனாய் மாறுகிறான்..
முப்புரம் எரித்தவன்
உட்புறம் எரிப்பதில்லை.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))