செவ்வாய், 28 ஜூலை, 2015

நட்பின் கவிதை.



இரகசியம்

பாவம்
யாருக்கும் தெரியாதென்று
வானத்து நட்சத்திரங்கள்
கண்ணடித்துக் கொள்கின்றன.

>>>>>>>>>>>>> 

பரிமாற்றங்களுக்கு
அழைப்பு விடுத்ததால்
என் பாசக் கரங்கள்
நீண்டு போனது
உன்
இருப்பிடம் வரை. !

>>>>>>>>>>>>>>> 

நீள் வெளியும்
விரிநிலமும்
உரசிக் கொள்கிற
தொடுவானமாய்
நம்
கனவுகளும் வாழ்க்கையும்.

>>>>>>>>>>> 

முகத்துக்கு முன்னால்
முகமன்கள் பேசும்
முதுகுக்குப் பின்னால்
சதிகள் தீட்டும் தேசமிது.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))