புதன், 29 ஜூலை, 2015

நட்பின் கவிதை -2



இறுகிய
பாறைக்குள்ளும்
வேர்பரப்பித்
தகர்க்கும்
பூ மரம்.!

>>>>>>> 

சிறகடித்துப் பறக்கும்
வானம்பாடிகளுக்கு
சிலந்தி வலைகளா
சிறைகளாவது ?

>>>>>>>>>>>> 

முகங்களே அறியாமல்
முகிழ்த்த ஸ்நேகம். !

இளைப்பாறக் கிடைத்த
கிளைகளின் இலைகள்
உதிர்ந்துபோனால்

நிஜமான எதுவும்
அழிவதில்லை தோழி !
ஸ்நேகமும் அப்படித்தான். !

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))