திங்கள், 27 ஏப்ரல், 2015

நிகழ்வுகள்



நிகழ்வுகள்

பறவைகள்
அந்நிய தேசங்கள்போய்க்
கூடுகள் தேடும்.
நகங்களை சிலாகிக்கும்.
ஏமாந்து
பார்வைக் கூடுகளுக்குள்
ஸ்நேகமுட்டை இடும்.,
கூடாய் வாங்கிக்க்கொள்ளும்.
சந்தோஷ வெப்பத்தில்
தெரியாமல் புகுந்துவிட்ட
குயில்முட்டையையும்
சேர்த்துப் ப்ரஸவிக்கும்
தீய்ச்சல் தெரியாமல்
உள்வாங்கித்
தேய்ந்துபோகும்.


-- 84 ஆம் வருட டைரி. 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))