செவ்வாய், 30 செப்டம்பர், 2014

வாடிப்போன சோகங்கள்.


கடந்துபோன கசப்பு நிஜங்கள்
எண்ணக் கசடுகளின் வெளிப்பாட்டில்
நிழலாடும் ஏக்கங்கள்

காணாமல் போன கரடி பொம்மை
கண்டெடுக்க கத்தும் குழந்தை மனம்

ஊமையழுகை
காணாமல் போன பொம்மைக்கோ
கடையில் பார்த்த பொம்மைக்கோ

ராமனுக்குக் காத்துக் கிடந்த
சீதையின்   தவிப்புச் சுவைகள்

இவையெல்லாம் இப்போது
செடியிலேயே சுருங்கி
என்னைப் பார்த்து விழிக்கும்
வாடிப்போன சோகங்கள்.

-- 82 ஆம் வருட டைரி

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))