வெள்ளி, 31 ஜனவரி, 2014

லட்சம் ஞாபகங்கள்

யாராக இருக்க வேண்டும்.
யாராக இருக்கிறேன்.
யாராக இருந்தால் நல்லது.
எல்லைக் கோட்பாடுகள் என்னென்ன..

எவெரெவர் கண்ணுக்கு
எப்படிப் புலப்படுகிறேன்
எவெரெவர் எப்படி
உணரக் கூடும்.

யாரை யாருக்குப் பிடிக்கிறது
யாரை யார் வெறுக்கிறார்கள்.
யார் யாரோ எப்படிப் போனாலென்ன
எதன் மிச்சமும் எச்சமும் எதிலிருக்கிறது.

புகைப்படங்களையும்
எழுத்துக்களையும் கூர்ந்து நோக்கிக்
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
என்னிலிருந்து யாரோவாகிறேன்.

நூறு பிறவி எடுக்கும் உருமுன்
யாராய் இருந்தாலென்ன
லட்சம் ஞாபகங்கள் சிதறிக் கிடக்கின்றன
அத்தனை பிறப்பாயும்.

3 கருத்துகள்:

  1. /// கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
    என்னிலிருந்து யாரோவாகிறேன்...///

    அழகான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))