சனி, 2 நவம்பர், 2013

கால்களற்ற காலங்கள்.



கால்களற்ற காலங்கள்

கடத்திப் போகின்றன.

கைபிடித்துச் சென்ற யுவதியைக்

கிழவியாக்கித் தொலைக்கின்றன.

நுரைப்புன்னகையோடு

அடித்துச் செல்லப்பட்டவள்

கண்ணோரம் கீறும்

காக்கைக் கோடுகளால் சிரிக்கிறாள்.

2 கருத்துகள்:

  1. யதார்த்தம் பொதிந்த கவிதை.கால்களற்ற காலங்கள் யுவதியை மட்டுமல்ல.முதியோர்களை, ஆதரவற்றவர்களை,,,,,,,என நிரைய சுமந்து செல்கிற வலிமை கொண்டகாலங்களுக்கு சமயத்தில் கால்கள் இல்லாதது சற்று வியப்பளிப்பதாகவே/

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் விமலன். கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))