இருள் ததும்புக் காடு
மேகம்வழி கசியும் நிலவு
மின்னி மறையும் மின்மினிகள்..
காதுக்குள் ரீங்காரமிடும் சில்வண்டுகள்
சுவாசக் காற்றோடு கலந்த பவளமல்லி..
இத்தனையோடும் இழைந்து கிடக்கிறது
தப்பித்தோடும் ஒரு கரப்பானும்
பொறிக்குத் தப்பிய எலியும்
கும்மாளமிடும் கூகையும்
கும்மிருட்டில் பறக்கும் வௌவாலும்
நிறைந்த ஒரு பூரண இரவு.
மேகம்வழி கசியும் நிலவு
மின்னி மறையும் மின்மினிகள்..
காதுக்குள் ரீங்காரமிடும் சில்வண்டுகள்
சுவாசக் காற்றோடு கலந்த பவளமல்லி..
இத்தனையோடும் இழைந்து கிடக்கிறது
தப்பித்தோடும் ஒரு கரப்பானும்
பொறிக்குத் தப்பிய எலியும்
கும்மாளமிடும் கூகையும்
கும்மிருட்டில் பறக்கும் வௌவாலும்
நிறைந்த ஒரு பூரண இரவு.
இப்படி எல்லாம் ரசிக்க வைக்கக் கூடாது...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி தனபால் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!