செவ்வாய், 22 அக்டோபர், 2013

பூரண இரவு.

இருள் ததும்புக் காடு
மேகம்வழி கசியும் நிலவு
மின்னி மறையும் மின்மினிகள்..
காதுக்குள் ரீங்காரமிடும் சில்வண்டுகள்
சுவாசக் காற்றோடு கலந்த பவளமல்லி..
இத்தனையோடும் இழைந்து கிடக்கிறது
தப்பித்தோடும் ஒரு கரப்பானும்
பொறிக்குத் தப்பிய எலியும்
கும்மாளமிடும் கூகையும்
கும்மிருட்டில் பறக்கும் வௌவாலும்
நிறைந்த ஒரு பூரண இரவு.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))