அடித்துப் பொழியும் மழை
அழித்துச் செல்கிறது
அனைத்தையும்.
நிர்மலமான வானத்தின்கீழ்
அழுக்கற்று நிற்கிறது பூமி.
குளிர்கவிதை எழுதிச்செல்கிறது
தத்திச் செல்லும் காற்று.
கதகதப்பாய்க் கசிகிறது
வெட்க அணைப்போடு சூரியன்.
முத்தமிடப் பால் வழியும் வாயோடு
ஓடி வருகிறது நிலா.
நினைவும் மறதியுமாய்
மெய்மறந்து நிற்கிறது சந்தியாகாலம்.
அழித்துச் செல்கிறது
அனைத்தையும்.
நிர்மலமான வானத்தின்கீழ்
அழுக்கற்று நிற்கிறது பூமி.
குளிர்கவிதை எழுதிச்செல்கிறது
தத்திச் செல்லும் காற்று.
கதகதப்பாய்க் கசிகிறது
வெட்க அணைப்போடு சூரியன்.
முத்தமிடப் பால் வழியும் வாயோடு
ஓடி வருகிறது நிலா.
நினைவும் மறதியுமாய்
மெய்மறந்து நிற்கிறது சந்தியாகாலம்.
என்னவொரு ரசனை...
பதிலளிநீக்குபொழுது சாயும்காலத்தை சந்தியாகாலமாக வர்ணித்து எழுதியிருப்பது மிக அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
பதிலளிநீக்குநன்றி சாய்ரோஸ்.