சனி, 27 ஜூலை, 2013

பசை


ஆளப்படாத மனதின் பக்கங்களில்


கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்.

அத்துமீறி.

பொய்க்கோபத்தோடு

கிழித்தெறிந்தபின்னும்

ஒட்டிக் கொண்டிருக்கின்றன

சில வார்த்தைகள்

பசையோடு.


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))