வெள்ளி, 19 ஜூலை, 2013

வாழ்த்து.

அம்மா முத்து அப்பா ரத்தினம்..
முத்து நவரத்தினமும்
புன்னகையில் ஜொலிக்கும்
சித்தப்பாவோ மாணிக்கம் ..
கோதையப்பத்தாவின்
செல்லமான நெல்லியான்
சீர்மிகு செல்லப்பனாகி
ராமசாமிஐயாவின்
குலம் தழைக்கச் சென்றார்.

குத்து விளக்காய்ச் சுடர்விடும்
வள்ளி என் தங்கையும்
குன்றின் விளக்காய்ப்
ப்ரகாசமாய்ச் சிரிக்கும்
ஸ்கந்தப் பழமும் பெற்று
நிழல்போல பின் தொடர்ந்து
இன்னொரு தாயாய்க் கனிவு காட்டும்
சித்திரச் சித்தியோடு
நெல்லிமரத்தான் அருளால்
நூறாண்டு வாழ்க..



1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))