செவ்வாய், 16 ஜூலை, 2013

ஊவா முள்

ஊவா முள்ளென
ஏதோ ஒன்று..
கர்ப்பத்தின் வாசலிலிருந்து
கழற்றி எறிய முடியாமல்.
கர்ணனாய்க்  கவசம்
நீக்கினால் உண்டு
வள்ளலெனும் பதவி..
ரத்தம் தோய்ந்த
தோலோடு
அஸ்வத்தாமனாய் அலைகிறது
யுகம் யுகமாய்ப்
படிய வைத்த
வெறுப்பெனும் இருள்.
உரிக்க உரிக்கக் கண்ணீர்..
ஒன்றுமில்லாமல்..
ஒன்றென்று நினைத்த
ஒன்றுமற்றதற்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))