சூரியனுக்குப் பின்
அந்திமந்தாரையோடு
குளிரப்பூக்கும் அவளை
இரவென்கிறார்கள்.
சூரிய ஒளியேற்றிப்
பயணித்து வரும்
பால்வண்ணக்காரனை
நிலவென்கிறார்கள்.
அவன் அவளைக்
கடந்துசெல்லும் போது
உராய்ந்து தெறிகின்றன
உடலெங்கும் நட்சத்திரங்கள்.
அவன் திரும்பும்வரை
சிதறும் நட்சத்திரங்களை
சேமித்துக் கொண்டிருக்கிறாள்
பெருகும் இன்பப் பால் வீதியாய்..
அந்திமந்தாரையோடு
குளிரப்பூக்கும் அவளை
இரவென்கிறார்கள்.
சூரிய ஒளியேற்றிப்
பயணித்து வரும்
பால்வண்ணக்காரனை
நிலவென்கிறார்கள்.
அவன் அவளைக்
கடந்துசெல்லும் போது
உராய்ந்து தெறிகின்றன
உடலெங்கும் நட்சத்திரங்கள்.
அவன் திரும்பும்வரை
சிதறும் நட்சத்திரங்களை
சேமித்துக் கொண்டிருக்கிறாள்
பெருகும் இன்பப் பால் வீதியாய்..
சிதறும் நட்சத்திரங்களை ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்கு