வெள்ளி, 28 ஜூன், 2013

துளசி..

களிகூர்ந்து
கருணை பொழிய
நனைந்து குளிர்கிறது
தாமரைக் கரங்களில்
துளசி..
தீபத்தின் வெம்மையில்
குளிர்காய்கிறது
திருமாலின் திருமார்பில்.
ஆரத்தி ஒளியில்
செம்மார்பில்
செம்மாந்திறுமாந்து
பிருகுவையும்
சுற்றவைக்கிறது
பாற்கடலை.
ஊறிக் கிடக்கும்
பெருமாளின்
மணம் சேர்ந்து
இணையாகிக்
காய்ந்தும்  மணக்கிறது.

2 கருத்துகள்:

  1. மணக்க வைக்கிறது வரிகளும்...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))