புதன், 29 மே, 2013

மனிதர்களைத் தேடி..

பொழுதின் கழுத்து
என் கைகளில்

காற்று
பலூன்களாய்,
நீர்க்குமிழிகளாய்
உருமாற்றம் பெறும்.

வாணச் சத்தங்கள்
மனசுக்குள்.

வடமெனும்
உயிர் இல்லாச்
சவமாய்த் தேர்.

வெய்யில் குல்லாய்க்குள்
தேராய்
மனம்.

தெய்வம்
மனிதர்களைத் தேடி
திருவிழாக் கூட்டத்துள்..

31.12.1986 -- 6.10 PM.. வீட்டு டைரியில் கிறுக்கியது.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))