திங்கள், 27 மே, 2013

ஒளியின் வருகை.:-

ஒளியின் வருகை.:-
கண் துலக்கிக்
கதிர் நீட்டிக்
கொடி தழுவிக்
காலெடுத்து
உள்நுழைகிறது
வெளிச்சப் பாதுகை..
தன்னை அழுத்திய
இருளெனும் மோகமுள் நீக்கி
உயிர்பெற்று எழுகிறாள்
உலகெனும்
அகலிகைப் பெண்.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))