வெள்ளி, 24 மே, 2013

மொட்டைமாடி.

சிதறிய தானியங்களைக்
கொத்தும் ஓவியமாய் இருக்கிறது குருவி.

சுளகின் மிளகாய் வற்றல்கள்
காரச் சிவப்போடு கண்ணேறுகின்றன.

நெகிழித் தண்ணீர்
நெகிழ்ந்து நொதித்துக்கொண்டிருக்கிறது.

அனலில் கறுத்துக் கரைந்து
எச்சமிடுகின்றன காக்கைகள்.

தன்னைத்தானே வேட்டியாய்
காயவைத்தபடி இருக்கிறது மொட்டைமாடி.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))