திங்கள், 1 ஏப்ரல், 2013

வலசை.

நூலுக்குள் கோர்க்கப்படாத ஊசி
யந்திரத்தோடு கோபித்துத் துருவாய்..
பேனாக் கோபங்கள்
பட்டாக்கத்தியாய்ப் பிளக்கும்
பீடிக்கும் எல்லா வியாதியும்
கடந்தே செல்லும்..
க்ரீடங்களை அடகு வைத்து
ராஜபார்ட்டை வாங்குவதில்லை
சரித்திரம் படைப்பவர்கள்..
பறந்து பறந்து வாழ்நாள் முழுதும்
சிறந்ததையே உண்ணும்
வலசைப் பறவைகள்
வயல்கள் தோறும் கண்காணிப்பில்..
விழுங்கி விழுங்கி
மண்புழுவாய் ஊர்ந்து போக
அதன் அதன் தடம்
அதனதன் பின்னால் நேசா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))