வியாழன், 7 மார்ச், 2013

மகளிர் தின நன்றிகள்..

தன்னைத் தானே
தேடியலையும் பெண்
இனம் காண்கிறாள்..
தன்னையும் தன்னினத்தையும்..
தாயாய், தமக்கையாய், தங்கையாய்
தோழிகளாய், மகளாய், பேத்தியாய்..
நீண்ட நெடிய பயணத்தில்
கைகோர்த்து உடன் வரும்
பாசம் கொண்ட தந்தைக்கும்
நேசம் கொண்ட சகோதரர்களுக்கும்
காதல் கொண்ட கணவருக்கும்,
கனிவு கொண்ட பிள்ளைகளுக்கும்
காணாமலே அன்பு செலுத்தும் சகோதரர்களுக்கும்
ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு உயர்விலும்
வாழ்த்தி மகிழும் நண்பர்களுக்கும்
திரும்ப ஒரு புன்னகையை, அன்பை,
அன்பான சொற்களைக் கொடுப்பதைத் தவிர
வேறென்ன செய்துவிடப் போகிறோம்..

நன்றி .. நன்றி.. நன்றி..:)


2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))